ஹதீஸ்கள்
#3576
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues and Merits
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹுதைபியா உடன்படிக்கையின்போது மக்களுக்குத் தாகம் ஏற்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் தோல் குவளை ஒன்று இருந்தது. (அதிலிருந்து) நபி (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை செய்தார்கள். மக்கள் நபி (ஸல்) அவர்களை நோக்கி ஓடிவந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “உங்களுக்கென்ன ஆயிற்று?” என்று கேட்டார்கள். மக்கள், “தங்கள் முன்னாலுள்ள தண்ணீரைத் தவிர நாங்கள் அங்கத் தூய்மை செய்வதற்கும் குடிப்பதற்கும் வேறு தண்ணீர் எங்களிடம் இல்லை” என்று பதிலளித்தனர். உடனே நபி (ஸல்) அவர்கள் தமது கையைத் தோல் குவளையினுள் இட்டார்கள். உடனே, அவர்களுடைய விரல்களுக்கிடையேயிருந்து ஊற்றுகளைப் போன்று தண்ணீர் பொங்கி வரத்தொடங்கியது. நாங்கள் அதிலிருந்து (தண்ணீர்) அருந்தி னோம்; மேலும், அங்கத் தூய்மை செய்தோம். அறிவிப்பாளர் சாலிம் பின் அபில் ஜஅத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம், “நீங்கள் எத்தனை பேர் இருந்தீர்கள்?” என்று கேட்டேன். அவர்கள், “நாங்கள் ஒரு லட்சம் பேர் இருந்திருந்தாலும்கூட அது எங்களுக்குப் போதுமானதாக இருந்திருக்கும். நாங்கள் ஆயிரத்து ஐந்நூறு பேர்தான் இருந்தோம்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا عبد العزيز بن مسلم، حدثنا حصين، عن سالم بن ابي الجعد، عن جابر بن عبد الله رضى الله عنهما قال عطش الناس يوم الحديبية، والنبي صلى الله عليه وسلم بين يديه ركوة فتوضا فجهش الناس نحوه، فقال " ما لكم ". قالوا ليس عندنا ماء نتوضا ولا نشرب الا ما بين يديك، فوضع يده في الركوة فجعل الماء يثور بين اصابعه كامثال العيون، فشربنا وتوضانا. قلت كم كنتم قال لو كنا ماية الف لكفانا، كنا خمس عشرة ماية
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues and Merits
- Hadith Index
- #3576
- Book Index
- 85
Grades
- -
