ஹதீஸ்கள்
#3569
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues and Merits
அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “ரமளான் மாதத்தி(ன் இரவுகளி)ல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை எப்படியிருந்தது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ரமளானி லும் மற்ற மாதங்களிலும் அவர்கள் பதினொரு ரக்அத்களுக்குமேல் தொழுத தில்லை. (முதலில்) நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகைப் பற்றியும் நீளத்தைப் பற்றியும் நீர் கேட்க வேண்டிய தில்லை. பிறகு நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகைப் பற்றியும் நீளத்தைப் பற்றியும் நீர் கேட்க வேண்டிய தில்லை. பிறகு மூன்று ரக்அத்கள் தொழுவார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் வித்ர் (மூன்று ரக்அத்கள்) தொழுவதற்கு முன்னால் உறங்குவீர்களா?” என்று கேட்டேன். அவர்கள், “என் கண்தான் உறங்குகிறது; என் உள்ளம் உறங்குவதில்லை' என்று பதிலளித்தார்கள்” என்று கூறினார்கள்.81 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues and Merits
- Hadith Index
- #3569
- Book Index
- 78
Grades
- -