ஹதீஸ்கள்
#3566
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues and Merits
அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஹஜ்ஜில்) நண்பகல் நேரத்தில் (கடும் வெயிலின்போது) நபி (ஸல்) அவர்கள் “அப்தஹ்' எனுமிடத்தில் கூடாரத்தில் இருக்க, நான் அவர்களிடம் போய்ச் சேர்ந்தேன். பிலால் (ரலி) அவர்கள் வெளியே புறப்பட்டுவந்து தொழுகைக்காக அழைப்பு விடுத்தார்கள்; பிறகு உள்ளே சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை செய்த தண்ணீரின் மிச்சத்தை வெளியே கொண்டுவந்தார்கள். அந்த நீரில் சிறிதளவு பெறுவதற்காக மக்கள் பிலால் (ரலி) அவர்களிடம் முண்டியடித்துக்கொண்டிருந்தனர். பிறகு பிலால் (ரலி) அவர்கள் உள்ளே சென்று ஈட்டியை வெளியே எடுத்துவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெளியே வந்தார்கள் -(இப்போதும்) நான் நபி (ஸல்) அவர்களுடைய கால்களின் பிரகாசத்தைப் பார்ப்பதைப் போன்றுள்ளது- பின்னர் ஈட்டியை நட்டு, லுஹ்ர் தொழுகையை இரண்டு ரக்அத்களாகவும் அஸ்ர் தொழுகையை இரண்டு ரக்அத் களாகவும் தொழுதார்கள். அப்போது அவர்களுக்கு முன்னால் கழுதையும் பெண்ணும் நடந்து சென்றுகொண்டிருந் தார்கள்.79 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues and Merits
- Hadith Index
- #3566
- Book Index
- 76
Grades
- -