ஹதீஸ்கள்
#3553
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues and Merits
அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜின்போது ஒருநாள்) நண்பகல் நேரத்தில் கடும் வெயிலில் “பத்ஹா'வை68 நோக்கிப் புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் “உளூ' செய்துவிட்டு லுஹ்ர் இரண்டு ரக்அத்கள் தொழுது அஸ்ர் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அப்போது அவர்களுக்கு முன்னால் சிறு ஈட்டி ஒன்று (நடப்பட்டு) இருந்தது. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில் அவ்ன் (ரஹ்) அவர்கள் கூடுதலாக அறிவித்துள்ள தாவது: (என் தந்தை) அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அந்த ஈட்டிக்கு அப்பால் பெண்கள்69 நடந்து சென்றுகொண்டிருந்தார்கள். மக்கள் அப்போது எழுந்து நபி (ஸல்) அவர்களின் இரு கரங்களையும் பிடித்து அவற்றால் தங்கள் முகங்களை வருடிக்கொள்ள லாயினர். நான் நபி (ஸல்) அவர்களின் கரத்தை எடுத்து என் முகத்தின் மீது வைத்துக்கொண்டேன். அது பனிக்கட்டியைவிட குளிர்ச்சியானதாகவும் கஸ்தூரியை விட நறுமணம் மிக்கதாகவும் இருந்தது.70 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues and Merits
- Hadith Index
- #3553
- Book Index
- 62
Grades
- -