ஹதீஸ்கள்
#3506
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues and Merits
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஸ்மான் (ரலி) அவர்கள் (அன்னை ஹஃப்ஸாவிடமிருந்து குர்ஆன் பதிவுகளை வாங்கிவரச் செய்து) ஸைத் பின் ஸாபித் (ரலி), அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி), சயீத் பின் அல்ஆஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அல்ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) ஆகியோரை அழைத்து, (அவற்றைப் பிரதியெடுக்கப் பணித்தார்கள்.) அவர்கள் ஏடுகளில் அவற்றைப் பிரதியெடுத் தார்கள். உஸ்மான் (ரலி) அவர்கள் (அன்சாரி யான ஸைத் பின் ஸாபித் (ரலி) தவிர உள்ள) குஹைஷியரின் மூன்று பேர் கொண்ட அந்தக் குழுவிடம், “நீங்கள் மூவரும் ஸைத் பின் ஸாபித்தும் குர்ஆனின் ஏதேனும் ஒரு (எழுத்து இலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டால் குறைஷியரின் மொழி வழக்கி லேயே அதை எழுதுங்கள். ஏனெனில், குர்ஆன் குறைஷியரின் மொழி வழக்கில் தான் அருளப்பெற்றது” என்று சொன்னார் கள். அக்குழுவினரும் அவ்வாறே செய்தார்கள். அத்தியாயம் :
حدثنا عبد العزيز بن عبد الله، حدثنا ابراهيم بن سعد، عن ابن شهاب، عن انس، ان عثمان، دعا زيد بن ثابت وعبد الله بن الزبير وسعيد بن العاص وعبد الرحمن بن الحارث بن هشام فنسخوها في المصاحف، وقال عثمان للرهط القرشيين الثلاثة اذا اختلفتم انتم وزيد بن ثابت في شىء من القران، فاكتبوه بلسان قريش، فانما نزل بلسانهم. ففعلوا ذلك
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues and Merits
- Hadith Index
- #3506
- Book Index
- 16
Grades
- -
