ஹதீஸ்கள்
#3502
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues and Merits
ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களும் நடந்து (நபி (ஸல்) அவர்களிடம் நீதி பெறச்) சென்றோம். உஸ்மான் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! முத்தலிபின் மக்களுக்கு நீங்கள் கொடுத்தீர்கள். எங்களை விட்டுவிட்டீர்களே! நாங்களும் அவர்களும் உங்களுக்கு ஒரே விதமான (உறவு) நிலையில்தானே இருக்கின்றோம்” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “பனூ ஹாஷிமும் (ஹாஷிம் கிளையாரும்) பனுல் முத்தலிபும்(முத்தலிப் கிளையாரும்) ஒருவர்தான் (வெவ்வேறானவர்கள் அல்லர்)” என்று பதிலளித்தார்கள்.15 அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، حدثنا الليث، عن عقيل، عن ابن شهاب، عن ابن المسيب، عن جبير بن مطعم، قال مشيت انا وعثمان بن عفان،، فقال يا رسول الله اعطيت بني المطلب وتركتنا، وانما نحن وهم منك بمنزلة واحدة. فقال النبي صلى الله عليه وسلم " انما بنو هاشم وبنو المطلب شىء واحد
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues and Merits
- Hadith Index
- #3502
- Book Index
- 12
Grades
- -
