ஹதீஸ்கள்
#3500
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues and Merits
முஹம்மத் பின் ஜுபைர் பின் முத்இம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முஆவியா (ரலி) அவர்களிடம் குறைஷியரின் ஒரு தூதுக் குழுவில் ஒருவராக நான் வருகை தந்திருந்தபோது அவர்களிடம் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள், “கஹ்த்தான் குலத்திலிருந்து மன்னர் ஒருவர் தோன்றுவார்” என்று அறிவிப்பதாகச் செய்தி வந்தது.13 அப்போது முஆவியா (ரலி) அவர்கள் கோபமடைந்து எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப போற்றிப் புகழ்ந்துவிட்டு பின்னர், “இறைவனைப் போற்றிப் புகழ்ந்த பின்பு கூறுகிறேன்: உங்களில் சிலர், அல்லாஹ் வின் வேதத்தில் இல்லாத, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக் கப்படாத செய்திகளைப் பேசுவதாக எனக் குத் தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் உங்களிடையேயுள்ள அறியாதவர்கள் ஆவர். தீய வழியில் செலுத்துகின்ற வெற்று நம்பிக்கைகளைக் குறித்து நான் உங்களை எச்சரிக்கின்றேன். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், “இந்த ஆட்சியதிகாரம் குறைஷியரிடம்தான் இருக்கும். அவர்களுடன் (அது தொடர்பாகப்) பகைமை பாராட்டுவோர் எவரையும் அல்லாஹ் முகம் குப்புறக் கவிழ்த்தே தீருவான். மார்க்கத்தை அவர்கள் நிலைநாட்டிவரும்வரை இந்நிலை நீடிக்கும்' என்று கூற நான் கேட்டிருக்கிறேன்” என்று சொன்னார்கள்.14 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues and Merits
- Hadith Index
- #3500
- Book Index
- 10
Grades
- -