ஹதீஸ்கள்
#3497
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues and Merits
தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “இந்தப் பணிக்காக உங்களிடமிருந்து எந்த ஊதியத்தையும் நான் கேட்கவில்லை. ஆயினும், உறவுமுறையை நீங்கள் பேணி நடக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” எனும் (42:23) இறைவசனம் குறித்து (இதன் கருத்து என்ன என்று) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அப்போது (அங்கிருந்த) சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள், “இதன் பொருள், “ஆயினும் என் உறவினர்களிடம் நீங்கள் அன்பு பாராட்ட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்' என்பதாகும்” என்று பதிலளித்தார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “குறைஷியரின் எந்தக் கிளைக் குலத்திற்கும் நபி (ஸல்) அவர்களுடன் உறவுமுறை இல்லாமல் இருந்ததில்லை. ஆகவே, “(குறைந்தபட்சம்) எனக்கும் உங்களுக்கும் இடையிலான அந்த உறவு முறையையாவது பேணி நடக்கும்படி உங்களைக் கேட்கிறேன்” என்னும் பொருளில்தான் இந்த இறைவசனம் அருளப்பெற்றது” என்று பதிலளித் தார்கள்.8 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues and Merits
- Hadith Index
- #3497
- Book Index
- 7
Grades
- -