ஹதீஸ்கள்
#3492
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues and Merits
குலைப் பின் வாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகள்- அவர்கள் ஸைனப் (ரலி) அவர்கள் என்று எண்ணுகிறேன்- எனக்கு அறிவித் தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மது சேகரித்து வைக்கப்படும்) சுரைக்காய்க் குடுவையையும், மண்சாடியையும், (பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரித்த) மரப் பீப்பாய்களையும், தார் பூசப் பட்ட பாத்திரங்களையும் (பயன்படுத்த வேண்டாமென்று) தடை விதித்தார்கள். நான் அவரிடம், “நபி (ஸல்) அவர்கள் எந்தக் கோத்திரத்தவர்களாயிருந்தார்கள் என்று எனக்குத் தெரிவியுங்கள்; அவர்கள் முளர் கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாகத் தானே இருந்தார்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “முளர் கோத்திரத்தைத் தவிர வேறெந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்? அவர்கள் நள்ர் பின் கினானாவின் சந்ததிகளில் ஒருவர் ஆவார்கள்” என்று சொன்னார்கள்.4 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues and Merits
- Hadith Index
- #3492
- Book Index
- 4
Grades
- -