ஹதீஸ்கள்
#3488
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்கள் மதீனாவுக்கு இறுதியாக வருகை தந்தார்கள். அப்போது எங்களுக்கு உரையாற்றியபடி முடிக்கற்றை ஒன்றை (கையில்) எடுத்து, ‘‘இதை (போலி முடி வைத்துக்கொள்ளும் செயலை) யூதர்களைத் தவிர வேறெவரும் செய்வதை நான் பார்த்ததில்லை. மேலும், நபி (ஸல்) அவர்கள் இதை யிபொய்யானது’ என்று சொன்னார்கள். தலைமுடியில் (சவுரி முடியை) ஒட்டவைப்பதைத்தான் நபி (ஸல்) அவர்கள் இப்படிக் குறிப்பிட்டார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ادم، حدثنا شعبة، حدثنا عمرو بن مرة، سمعت سعيد بن المسيب، قال قدم معاوية بن ابي سفيان المدينة اخر قدمة قدمها، فخطبنا فاخرج كبة من شعر فقال ما كنت ارى ان احدا يفعل هذا غير اليهود، وان النبي صلى الله عليه وسلم سماه الزور يعني الوصال في الشعر. تابعه غندر عن شعبة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3488
- Book Index
- 154
Grades
- -
