ஹதீஸ்கள்
#3448
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! விரைவில் (உலக அழிவுக்குமுன்) மர்யமின் மைந்தர் உங்களிடையே நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக இறங்கவிருக்கிறார். அவர் சிலுவையை உடைப்பார்; பன்றியைக் கொல்வார்; ஜிஸ்யா (எனும் காப்பு) வரியை வாங்க மறுப்பார்; (இஸ்லாம் ஒன்றையே மக்களிடமிருந்து ஏற்பார்.) வாங்கிக்கொள்வதற்கு யாரும் இல்லாத அளவுக்குச் செல்வம் கொழிக்கும். அந்த நேரத்தில், ஒரேயொரு சஜ்தா (சிரவணக்கம்) இந்த உலகத்தையும் அதிலுள்ளவற்றையும்விடச் சிறந்ததாக (மக்களின் பார்வையில்) ஆகிவிடும். இந்த நபிமொழியை அறிவித்துவிட்டு அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘வேதம் வழங்கப்பட்டவர்களில் எவரும், தாம் இறப்பதற்கு முன்பாக அவர் (ஈசாவின்)மீது நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள். மேலும், மறுமை நாளில் அவர்களுக்கெதிரான சாட்சியாக அவர் இருப்பார்’ (4:159) எனும் வசனத்தை நீங்கள் விரும்பினால் ஓதிக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.125 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3448
- Book Index
- 118
Grades
- -