ஹதீஸ்கள்
#3446
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் தம் அடிமைப் பெண் ணுக்கு ஒழுக்கம் கற்பித்து அவளுக்கு ஒழுக்கம் கற்பிக்கும் பணியைச் செம்மை யான முறையில் செய்து, அவளுக்குக் கல்வி கற்பித்து, அவளுக்குக் கல்வி கற்பிக்கும் பணியைச் செம்மையான முறையில் செய்து, பிறகு அவளுக்கு விடுதலை அளித்து அவளை (தாமே) மணமும் முடித்துக்கொண்டார் எனில் அவருக்கு இரு நற்பலன்கள் கிடைக்கும். ஒருவர் ஈசா (அலை) அவர்களின் மீது நம்பிக்கை கொண்டு, பிறகு என்மீதும் நம்பிக்கை கொண்டால் அவருக்கு இரு நற்பலன்கள் கிடைக்கும். ஓர் அடிமை தன் இறைவனுக்கு அஞ்சி, தன் எஜமானர் களுக்குக் கீழ்ப்படிந்தும் நடப்பானாயின் அவனுக்கும் இரு நற்பலன்கள் கிடைக் கும். இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن مقاتل، اخبرنا عبد الله، اخبرنا صالح بن حى، ان رجلا، من اهل خراسان قال للشعبي. فقال الشعبي اخبرني ابو بردة عن ابي موسى الاشعري رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم " اذا ادب الرجل امته فاحسن تاديبها، وعلمها فاحسن تعليمها ثم اعتقها فتزوجها، كان له اجران، واذا امن بعيسى ثم امن بي، فله اجران، والعبد اذا اتقى ربه واطاع مواليه، فله اجران
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3446
- Book Index
- 116
Grades
- -
