ஹதீஸ்கள்
#3445
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘நபி (ஸல்) அவர்கள், ‘கிறித்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர் களை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்திவிட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்திவிடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான்தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) ‘அல்லாஹ்வின் அடியார்’ என்றும் ‘அல்லாஹ்வின் தூதர்’ என்றும் சொல்லுங் கள்’ என்று கூறினார்கள்” என சொற் பொழிவு மேடை மீதிருந்தபடி உமர் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கி றேன்.124 அத்தியாயம் :
حدثنا الحميدي، حدثنا سفيان، قال سمعت الزهري، يقول اخبرني عبيد الله بن عبد الله، عن ابن عباس، سمع عمر رضى الله عنه يقول على المنبر سمعت النبي صلى الله عليه وسلم يقول " لا تطروني كما اطرت النصارى ابن مريم، فانما انا عبده، فقولوا عبد الله ورسوله
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3445
- Book Index
- 115
Grades
- -
