ஹதீஸ்கள்
#3444
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்கள், ஒரு மனிதர் திருடிக்கொண்டிருப் பதைக் கண்டார்கள். அவரிடம், ‘‘நீ திருடினாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘‘இல்லை; எவனைத் தவிர வேறு இறைவனில்லையோ அவன் மீதாணை யாக!” என்று பதிலளித்தார். உடனே ஈசா (அலை) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீது நான் நம்பிக்கை கொண்டேன்; என் கண்ணை நம்ப மறுத்துவிட்டேன்” என்று சொன்னார்கள்.123 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
وحدثنا عبد الله بن محمد، حدثنا عبد الرزاق، اخبرنا معمر، عن همام، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " راى عيسى ابن مريم رجلا يسرق، فقال له اسرقت قال كلا والله الذي لا اله الا هو. فقال عيسى امنت بالله وكذبت عيني
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3444
- Book Index
- 114
Grades
- -
