ஹதீஸ்கள்
#3441
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! ஈசா (அலை) அவர்களைக் குறித்து ‘‘அவர்கள் சிவப்பு நிறமுடையவர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. மாறாக (இப்படித்தான்) கூறினார்கள்: நான் தூங்கிக்கொண்டிருக்கையில் (கனவில்) கஅபாவைச் சுற்றுக்கொண்டி ருந்தேன். அப்போது மாநிறமுடைய தலைமுடி படிந்து தொங்கிய வண்ணமிருந்த ஒரு மனிதர் தமது தலையிலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருக்க... அல்லது யிவழிந்துகொண்டிருக்க’ இரு மனிதர்களி டையே தொங்கிக்கொண்டு (கஅபாவைச் சுற்றிக்கொண்டு) இருந்தார். நான், ‘‘இவர் யார்?” என்று கேட்டேன். ‘‘மர்யமின் குமாரர்” என்று பதிலளித்தார்கள். நான் (தொடர்ந்து முன்னேறிச்) சென் றேன். அங்கு சிவப்பான, தடிமனான, சுருட்டைத் தலைமுடியுள்ள, வலக்கண் குருடான மனிதன் ஒருவன் இருந்தான். அவனது கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றி ருந்தது. நான், ‘‘யார் இது?” என்று கேட் டேன், யிதஜ்ஜால்’ என்று பதிலளித்தார்கள் (தோற்றத்தில்) மக்களிலேயே அவனுக்கு அதிக ஒப்பானவர் யிஇப்னு கத்தன்’தான். இமாம் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இப்னு கத்தன் யிகுஸாஆ’ குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர். அறியாமைக் காலத்திலேயே அவர் இறந்துபோனார். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3441
- Book Index
- 111
Grades
- -