ஹதீஸ்கள்
#3437
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், (விண்) பயணத் திற்காகத் தாம் கொண்டுசெல்லப்பட்ட இரவில் நடந்தவற்றை விவரித்துக் கூறிய படி, ‘‘நான் மூசா (அலை) அவர்களைச் சந்தித்தேன்” என்று கூறிவிட்டு, அவர் (களின் அங்க அடையாளங்)களை வர்ணித்தார்கள். (அப்போது சொன்னார் கள்:) மூசா (அலை) அவர்கள் (யமன் நாட்டைச் சேர்ந்த) ‘ஷனூஆ’ குலத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவரைப் போல ஒல்லியான (சதை குறைந்த)வராக, தலைமுடி தொங்கலாக (வாரி)விட்டிருப்பவராக இருந்தார்கள். (தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள்) ‘‘நான் ஈசா (அலை) அவர்களைச் சந்தித் தேன்” என்று கூறிவிட்டு, அவர்(களின் அங்க அடையாளங்)களை வர்ணித்தார்கள்: சிவப்பு நிறமுடையவர்களாக, நடுத்தர உயரம் உடையவர்களாக, (அப்போதுதான்) குளியலறை’லிருந்து வெளியே வந்தவர்களைப்போல் அவர்கள் இருந்தார்கள். மேலும், நான் இப்ராஹீம் (அலை) அவர்களையும் பார்த்தேன். நான்தான் அவர்களுடைய வழித் தோன்றல்களிலேயே (தோற்றத்தில்) அவர்களுக்கு மிகவும் ஒப்பானவனாக இருக்கிறேன். என்னிடம் இரு பாத்திரங்கள் கொண்டுவரப்பட்டன. அவற்றில் ஒன்றில் பாலும் மற்றொன்றில் மதுவும் இருந்தது. ‘‘நீங்கள் விரும்பியதை எடுத்துக்கொள்ளுங்கள்” என்று என்னிடம் சொல்லப்பட்டது. நான் பாலை எடுத்து அதைப் பருகினேன். அப்போது, ‘‘நீங்கள் இயற்கையான வழியில் செலுத்தப்பட்டுவிட்டீர்கள். அல்லது நீங்கள் இயற்கையைப் பெற்றுக் கொண்டீர்கள்” என்று என்னிடம் சொல்லப் பட்டது. ‘‘நீங்கள் மதுவை எடுத்துக் கொண்டிருந்தால் உங்கள் சமுதாயம் வழி தவறிப்போயிருக்கும்” என்றும் சொல்லப் பட்டது.120 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3437
- Book Index
- 108
Grades
- -