ஹதீஸ்கள்
#3431
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘ஆதமின் மக்களில் (புதிதாகப்) பிறக்கும் குழந்தை எதுவாயினும் அது பிறக்கும்போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தானின் தீண்டலால் அக்குழந்தை கூக்குரலெழுப்பும். மர்யமை யும் அவருடைய மகனையும் தவிர என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்” என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். பிறகு, ‘‘நான் இக்குழந்தையையும் அதன் வழித்தோன்றலையும் சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து பாதுகாக்குமாறு உன்னிடம் கோருகிறேன்” (என்று மர்யம் வேண்டினார்) எனும் இறைவசனத்தை (3:36) ஓதுவார்கள்.115 அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري، قال حدثني سعيد بن المسيب، قال قال ابو هريرة رضى الله عنه سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " ما من بني ادم مولود الا يمسه الشيطان حين يولد، فيستهل صارخا من مس الشيطان، غير مريم وابنها ". ثم يقول ابو هريرة {واني اعيذها بك وذريتها من الشيطان الرجيم}
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3431
- Book Index
- 102
Grades
- -
