ஹதீஸ்கள்
#3429
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: யிஎவர் இறைநம்பிக்கை கொண்டு (பின்னர்) தமது இறைநம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடவில்லையோ’ என்னும் (6:82) வசனம் அருளப்பட்டபோது, அது முஸ்லிம்களுக்கு மிகவும் கடினமான தாகத் தென்பட்டது. ஆகவே, அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எங்களில் தமக் குத்தாமே அநீதியிழைத்துக்கொள்ளாதவர் யார்?” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘(இந்த வசனம் குறிப்பிடுவது) அதுவல்ல. அது இணைவைப்பையே குறிக்கிறது. யிஎன் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே. நிச்சயமாக, இணைகற்பிப்பது மாபெரும் அநீதியாகும்’ என்று (அறிஞர்) லுக்மான், தம் மகனுக்கு அறிவுரை கூறுவதை (குர்ஆன் எடுத்துரைக்கின்றதே, (31:13) அதை) நீங்கள் கேட்கவில்லையா?” என்று சொன்னார்கள்.110 அத்தியாயம் :
حدثني اسحاق، اخبرنا عيسى بن يونس، حدثنا الاعمش، عن ابراهيم، عن علقمة، عن عبد الله رضى الله عنه قال لما نزلت {الذين امنوا ولم يلبسوا ايمانهم بظلم} شق ذلك على المسلمين، فقالوا يا رسول الله، اينا لا يظلم نفسه قال " ليس ذلك، انما هو الشرك، الم تسمعوا ما قال لقمان لابنه وهو يعظه {يا بنى لا تشرك بالله ان الشرك لظلم عظيم}
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3429
- Book Index
- 100
Grades
- -
