ஹதீஸ்கள்
#3425
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (நபி (ஸல்) அவர்களிடம்), ‘‘அல்லாஹ்வின் தூதரே! முதலாவதாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் எது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அல்மஸ்ஜிதுல் ஹராம் (மக்காவிலுள்ள புனித இறையில்லம்)” என்று பதிலளித்தார் கள். நான், ‘‘பிறகு எது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘பிறகு ‘அல்மஸ்ஜிதுல் அக்ஸா’ (ஜெரூசலம் நகரிலுள்ள ‘அல் அக்ஸா’ பள்ளிவாசல்)” என்று பதிலளித்தார் கள். நான், ‘‘அவ்விரண்டிற்குமிடையே எவ்வளவு காலம் (இடைவெளி) இருந்தது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘நாற்பதாண்டு காலம் (இடைவெளி) இருந்தது” என்று கூறினார்கள். பிறகு, ‘‘உன்னைத் தொழுகை (நேரம்) எங்கே வந்தடைந்தாலும் நீ தொழுதுகொள். ஏனெனில், பூமி முழுவதுமே உனக்கு சிரவணக்கம் செய்யுமிடம் (இறைவனை வழிபடும் தலம்) ஆகும்” என்று சொன் னார்கள்.105 அத்தியாயம் :
حدثني عمر بن حفص، حدثنا ابي، حدثنا الاعمش، حدثنا ابراهيم التيمي، عن ابيه، عن ابي ذر رضى الله عنه قال قلت يا رسول الله. اى مسجد وضع اول قال " المسجد الحرام ". قلت ثم اى قال " ثم المسجد الاقصى ". قلت كم كان بينهما قال " اربعون ". ثم قال " حيثما ادركتك الصلاة فصل، والارض لك مسجد
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3425
- Book Index
- 97
Grades
- -
