ஹதீஸ்கள்
#3423
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: நேற்றிரவு முரட்டு ஜின் ஒன்று என் தொழுகையைக் கெடுக்க திடீரென்று வந்து நின்றது. அல்லாஹ் எனக்கு அதை வசப்படுத்தித்தந்தான். நான் அதைப் பிடித்துக்கொண்டேன். நீங்கள் ஒவ்வொரு வரும் அதைப் பார்ப்பதற்காக அதைப் பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் கட்டி வைக்க விரும்பினேன். அப்போது, என் சகோதரர் சுலைமான் (அலை) அவர்கள் செய்த, ‘‘என் இறைவா! எனக்குப்பின் வேறெவருக்கும் கிடைக்காத ஓர் ஆளுமையை எனக்கு வழங்குவாயாக!” (38:35) எனும் பிரார்த்தனையை நினைவு கூர்ந்தேன். உடனே, அதைச் சபித்து எறியப்பட்டதாகத் திருப்பியனுப்பி விட்டேன். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.103 இங்கு யிமுரட்டு ஜின்’ என்பதைக் குறிக்க யிஇஃப்ரீத்’ எனும் சொல் ஆளப் பட்டுள்ளது. இது மனிதர்களில் அல்லது ஜின்களில் முரடர்களைக் குறிக்கும். வானவர்களில் நரகத்தின் பொறுப்பாளர் களுக்கு ‘ஸபானியா’ என்று சொல்லப் படும். அத்தியாயம் :
حدثني محمد بن بشار، حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، عن محمد بن زياد، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم " ان عفريتا من الجن تفلت البارحة ليقطع على صلاتي، فامكنني الله منه، فاخذته، فاردت ان اربطه على سارية من سواري المسجد حتى تنظروا اليه كلكم فذكرت دعوة اخي سليمان رب هب لي ملكا لا ينبغي لاحد من بعدي. فرددته خاسيا ". عفريت متمرد من انس او جان، مثل زبنية جماعتها الزبانية
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3423
- Book Index
- 95
Grades
- -
