ஹதீஸ்கள்
#3421
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான், ‘ஸாத்’ (எனும் 38ஆவது) அத்தி யாயத்தில் (ஓதலுக்குரிய) சஜ்தா செய்வீர் களா? என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அப்போது அவர்கள், ‘‘மேலும், இப்ராஹீமுடைய வழித்தோன்றல்களான தாவூத், சுலைமான், அய்யூப், மூசா, ஹாரூன் ஆகியோருக்கும் நல்வழி காட்டினோம். இவ்வாறு... (நபியே!) அவர்கள்தான் அல்லாஹ்வால் நல்வழி காட்டப்பட்டவர்கள். அவர்களின் வழியை (நீரும்) பின்பற்றுவீராக!” எனும் (6:84லி90) குர்ஆன் வசனங்களை ஓதினார்கள். பிறகு, ‘‘உங்கள் நபி (ஸல்) அவர்களும் கூட முந்தைய நபிமார்களைப் பின்பற்றும் படி கட்டளையிடப்பட்டுள்ளவர்களில் ஒருவர்தான்” என்று சொன்னார்கள்.101 அத்தியாயம் :
حدثنا محمد، حدثنا سهل بن يوسف، قال سمعت العوام، عن مجاهد، قال قلت لابن عباس اسجد في {ص} فقرا {ومن ذريته داود وسليمان} حتى اتى {فبهداهم اقتده} فقال نبيكم صلى الله عليه وسلم ممن امر ان يقتدي بهم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3421
- Book Index
- 93
Grades
- -
