ஹதீஸ்கள்
#3419
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘நீங்கள் இரவில் நின்று வழிபடுவதாகவும் பகலில் நோன்பு நோற்பதாகவும் எனக்குச் செய்தி கிடைத்ததே” என்று கேட்டார்கள். நான், ‘‘ஆம் (உண்மைதான்!)” என்றேன். அவர்கள், ‘‘நீங்கள் அப்படிச் செய்தால் உங்கள் கண்கள் பஞ்சடைந்துவிடும்; மனம் களைப்படைந்து விடும். ஆகவே, ஒவ்வொரு மாதத்திலிருந் தும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! அது காலமெல்லாம் நோன்பு நோற்றதாகும்; அல்லது காலமெல்லாம் நோன்பு நோற்ற தைப் போன்றதாகும்” என்று சொன்னார் கள். நான், ‘‘எனக்கு (இதைவிட அதிகமாக நோற்பதற்குச்) சக்தியிருப்பதாக நான் உணர்கிறேன்” என்று சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படி யென்றால், தாவூத் (அலை) அவர்களின் நோன்பை நீர் நோற்பீராக! அவர்கள் ஒருநாள் நோன்பு நோற்று ஒருநாள் விட்டுவிடுவார்கள். (போர்க் காலத்தில் பகைவர்களைச்) சந்திக்கும்போது பின் வாங்கி ஓடமாட்டார்கள்” என்று கூறி னார்கள்.97 அத்தியாயம் :
حدثنا خلاد بن يحيى، حدثنا مسعر، حدثنا حبيب بن ابي ثابت، عن ابي العباس، عن عبد الله بن عمرو بن العاص، قال قال لي رسول الله صلى الله عليه وسلم " الم انبا انك تقوم الليل وتصوم ". فقلت نعم. فقال " فانك اذا فعلت ذلك هجمت العين ونفهت النفس، صم من كل شهر ثلاثة ايام، فذلك صوم الدهر او كصوم الدهر ". قلت اني اجد بي قال مسعر يعني قوة. قال " فصم صوم داود عليه السلام وكان يصوم يوما، ويفطر يوما، ولا يفر اذا لاقى
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3419
- Book Index
- 91
Grades
- -
