ஹதீஸ்கள்
#3417
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: தாவூத் (அலை) அவர்களுக்கு (தவ்ராத், ஸபூர் ஆகிய இறைவேதங்களை) ஓதுவது எளிதாக்கப்பட்டிருந்தது. தமது (குதிரை) வாகனத்தை (சவாரிக்காக)த் தயார் செய்யும் படி உத்தரவிடுவார்கள். உடனே அதற்குச் சேணம் பூட்டப்படும். வாகனத்திற்குச் சேணம் பூட்டப்படுவதற்கு முன்பே இறை வேதத்தை ஓதிவிடுவார். தமது கையால் உழைத்துப் பெறும் சம்பாத்தியத்திலிருந்துதான் அவர் உண்பார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد، حدثنا عبد الرزاق، اخبرنا معمر، عن همام، عن ابي هريرة رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " خفف على داود عليه السلام القران، فكان يامر بدوابه فتسرج، فيقرا القران قبل ان تسرج دوابه، ولا ياكل الا من عمل يده ". رواه موسى بن عقبة عن صفوان، عن عطاء بن يسار، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3417
- Book Index
- 89
Grades
- -
