ஹதீஸ்கள்
#3409
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதம் (அலை) அவர்களும் மூசா (அலை) அவர்களும் தர்க்கம் செய்துகொண்டார்கள். ஆதமிடம் மூசா (அலை), ‘‘உங்கள் தவறு உங்களைச் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியதே அந்த ஆதம் நீங்கள்தானோ?” என்று கேட்டார்கள். அதற்கு ஆதம் (அலை) மூசா (அலை) அவர்களிடம், ‘‘நீங்கள் அல்லாஹ், தன் தூதுத்துவச் செய்திகளை அனுப்பிடவும் தன்னுடன் உரையாடவும் தேர்ந்தெடுத்துக்கொண்ட மூசா ஆவீர். இருந்தும், நான் படைக்கப்படுவதற்கு முன்பே என்மீது விதிக்கப்பட்ட ஒரு விஷயத்திற்காக என்னை நீங்கள் பழிக்கிறீர்களே!” என்று கேட்டார்கள். ‘‘இதைக் கூறியபின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், யிஆக, ஆதம் (அலை) அவர்கள் விவாதத்தில் மூசா (அலை) அவர்களை வென்றுவிட்டார்கள்’ என்று இருமுறை சொன்னார்கள்” என இந்த நபிமொழியை அறிவிக்கும் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார் கள். அத்தியாயம் :
حدثنا عبد العزيز بن عبد الله، حدثنا ابراهيم بن سعد، عن ابن شهاب، عن حميد بن عبد الرحمن، ان ابا هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " احتج ادم وموسى فقال له موسى انت ادم الذي اخرجتك خطييتك من الجنة. فقال له ادم انت موسى الذي اصطفاك الله برسالاته وبكلامه، ثم تلومني على امر قدر على قبل ان اخلق ". فقال رسول الله صلى الله عليه وسلم " فحج ادم موسى " مرتين
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3409
- Book Index
- 82
Grades
- -
