ஹதீஸ்கள்
#3406
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (யிமர்ருழ் ழஹ்ரான்’ எனுமி டத்தில்) ‘அராக்’ (மிஸ்வாக்) மரத்தின் பழங்களைப் பறித்துக்கொண்டு இருந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அதில் கறுப்பான பழத்தை நீங்கள் பறியுங்கள். ஏனெனில், அதுதான் அவற் றில் மிகவும் நல்லது” என்று சொன் னார்கள். மக்கள், ‘‘நீங்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தீர்களா?” என்று கேட்டனர். அதற்கு அவர்கள், ‘‘ஆடு மேய்க்காத இறைத்தூதர் யாரேனும் உண்டா?” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، حدثنا الليث، عن يونس، عن ابن شهاب، عن ابي سلمة بن عبد الرحمن، ان جابر بن عبد الله رضى الله عنهما قال كنا مع رسول الله صلى الله عليه وسلم نجني الكباث، وان رسول الله صلى الله عليه وسلم قال " عليكم بالاسود منه، فانه اطيبه ". قالوا اكنت ترعى الغنم قال " وهل من نبي الا وقد رعاها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3406
- Book Index
- 79
Grades
- -
