ஹதீஸ்கள்
#3385
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நோயுற்றார்கள். அப்போது, ‘‘அபூபக்ரிடம் மக்களுக்குத் தொழுவிக்கும்படி சொல்லுங்கள்” என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘அபூபக்ர் (ரலி) அவர்கள் இத்தகைய (இளகிய மனமுடைய)வராயிற்றே!” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் முன்பு போலவே (மீண்டும்) சொல்ல, ஆயிஷாவும் அதையே சொன்னார்கள். பின்னர், நபி (ஸல்) அவர்கள் ‘‘அபூபக்ருக் குச் சொல்லுங்கள். அவர் மக்களுக்குத் தொழுவிக்கட்டும். (பெண்களாகிய) நீங்கள் யூசுஃபுடைய (அழகில் மயங்கிய) தோழி கள் போன்(று உள்நோக்கத்துடன் பேசு கின்)றவர்கள்” என்று கூறினார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்நாளிலேயே அபூபக்ர் (ரலி) அவர்கள் (மக்களுக்குத்) தொழுவித் தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஹுசைன் பின் அலீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் காணப்படுவதாவது: ஸாயிதா பின் குதாமா (ரஹ்) அவர்கள், (‘அபூபக்ர் (ரலி) அவர்கள் இத்தகைய மனிதராயிற்றே’ என்னும் ஆயிஷா (ரலி) அவர்களின் சொல்லுக்குப் பதிலாக,) யிஇளகிய மனமுடைய மனிதராயிற்றே’ என்று சொன்னதாக அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3385
- Book Index
- 59
Grades
- -