ஹதீஸ்கள்
#3384
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (தம் இறுதி நாட் களில்) என்னிடம், ‘‘அபூபக்ர் அவர்களை மக்களுக்குத் தொழுவிக்கும்படி சொல்” என்று சொன்னார்கள். நான், ‘‘அவர்கள் (அதிகமாகத் துக்கப்படுகின்ற) இளகிய மனம் உடையவர்கள். நீங்கள் தொழுகைக் காக நிற்குமிடத்தில் அவர்கள் நிற்க நேரும்போது மனம் நெகிழ்ந்துபோய் (அழுது)விடுவார்கள்” என்று சொன்னேன். அவர்கள் முன்பு சொன்னதைப் போன்றே மீண்டும் சொன்னார்கள். நானும் முன்பு சொன்ன பதிலையே மீண்டும் சொன்னேன். அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் மூன்றாவது முறையில் லிஅல்லது நான்காவது முறையில்லி ‘‘(பெண்களாகிய) நீங்கள் யூசுஃபுடைய (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள்நோக்கத்துடன் பேசுகின்)றவர்கள். அபூபக்ருக்குச் சொல்லுங்கள்” என்று கூறினார்கள்.59 அத்தியாயம் :
حدثنا بدل بن المحبر، اخبرنا شعبة، عن سعد بن ابراهيم، قال سمعت عروة بن الزبير، عن عايشة رضى الله عنها ان النبي صلى الله عليه وسلم قال لها " مري ابا بكر يصلي بالناس ". قالت انه رجل اسيف، متى يقم مقامك رق. فعاد فعادت، قال شعبة فقال في الثالثة او الرابعة " انكن صواحب يوسف، مروا ابا بكر
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3384
- Book Index
- 58
Grades
- -
