ஹதீஸ்கள்
#3380
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ர் பகுதியைக் கடந்து சென்றபோது, ‘‘அக்கிரமம் புரிந்தவர்களின் வசிப்பிடங்களில் அவர்களுக்குக் கிடைத்த அதே தண்டனை உங்களுக்கும் கிடைத்துவிடுமோ என்று அஞ்சி அழுதபடியே தவிர நுழையாதீர்கள்” என்று சொன்னார்கள். பிறகு அவர்கள் சேண இருக்கையின் மீது இருந்தபடியே தமது போர்வையால் (தம்மை) மறைத்துக் கொண்டார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3380
- Book Index
- 54
Grades
- -