ஹதீஸ்கள்
#3379
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கள் (தபூக் போரின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஸமூத் கூட்டத்தார் வசித்த பூமியான யிஹிஜ்ர்’ என்னும் பகுதியில் தங்கினார்கள். அதன் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து அதனால் மாவு பிசைந்தார்கள். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பகுதியின் கிணற்றிலிருந்து அவர்கள் இறைத்த தண்ணீரைக் கொட்டிவிடுமாறும் (அதனால் பிசைந்த) அந்த மாவை ஒட்டகங்களுக்குத் தீனியாகப் போட்டுவிடுமாறும் கட்டளை யிட்டார்கள். மேலும், (ஸாலிஹ் (அலை) அவர் களின்) ஒட்டகம் (தண்ணீர் குடிப்பதற்காக) வந்துகொண்டிருந்த கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ளுமாறும் உத்தர விட்டார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابراهيم بن المنذر، حدثنا انس بن عياض، عن عبيد الله، عن نافع، ان عبد الله بن عمر رضى الله عنهما اخبره ان الناس نزلوا مع رسول الله صلى الله عليه وسلم ارض ثمود الحجر، فاستقوا من بيرها، واعتجنوا به، فامرهم رسول الله صلى الله عليه وسلم ان يهريقوا ما استقوا من بيرها، وان يعلفوا الابل العجين، وامرهم ان يستقوا من البير التي كان تردها الناقة. تابعه اسامة عن نافع
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3379
- Book Index
- 53
Grades
- -
