ஹதீஸ்கள்
#3378
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தபூக் போரின்போது (ஸமூத் குலத்தார் வாழ்ந்த) யிஹிஜ்ர்’ என்னும் இடத்தில் தங்கிய சமயம் அதன் கிணற்றிலிருந்து (தண்ணீர்) அருந்த வேண்டாம் என்றும் அதிலிருந்து தண்ணீர் எடுக்க வேண்டாம் என்றும் தம் தோழர்களுக்கு உத்தர விட்டார்கள். தோழர்கள், ‘‘நாங்கள் அதிலிருந்து (எடுத்த தண்ணீரால் ஏற்கெனவே) மாவு பிசைந்துவிட்டோமே! (என்ன செய்வது?)” என்று கேட்டனர். அதற்கு அவர்கள் அந்த மாவை (சாப்பிடாமல்) வீசியெறிந்துவிடுமாறும் அந்தத் தண் ணீரைக் கொட்டிவிடுமாறும் உத்தரவிட்டார்கள். (ஸமூத் குலத்தாரின் கிணற்றிலிருந்து எடுத்த தண்ணீரால் தயாரித்த) உணவை எறிந்துவிடும்படி நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்” என்று சப்ரா பின் மஅபத் (ரஹ்) அவர்களும் அபுஷ் ஷமூஸ் (ரஹ்) அவர்களும் அறிவிக்கிறார்கள். ‘‘அதன் தண்ணீரால் மாவு தயாரித்தவர் அதை எறிந்துவிடட்டும்” என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3378
- Book Index
- 52
Grades
- -