ஹதீஸ்கள்
#3373
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அம்பெறியும் விளையாட்டில் ஈடுபட்டிருந்த, பனூ அஸ்லம் குலத்தைச் சேர்ந்த சிலரைக் கடந்து சென்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இஸ்மாயீலின் மக்களே! அம்பெய்யுங்கள். ஏனெனில், உங்கள் தந்தை (இஸ்மாயீல் (அலை) அவர்களும்) அம்பெய்யும் கலையில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தார்கள்.45 நீங்கள் அம்பெறியுங்கள். நான் இன்ன குலத்தாருடன் இருக்கிறேன்” என்று சொன்னார்கள். அப்போது அம்பெய்யும் போட்டியில் ஈடுபட்டிருந்த இரு சாராரில் ஒரு சாரார் தம் கைகளை (அம்பெய்யாமல்) தடுத்து நிறுத்திக்கொண்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உங்களுக்கு என்ன நேர்ந்தது? ஏன் அம் பெய்யாமல் இருக்கிறீர்கள்?” என்று கேட் டார்கள். அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹ் வின் தூதரே! தாங்கள் அவர்களுடன் (எதிர் தரப்பினருடன்) இருக்க, நாங்கள் அம்பெய்வோமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், (மீண்டும்) ‘‘நீங்கள் அம்பெய்யுங்கள். நான் உங்கள் அனைவருடனும் இருக்கின்றேன்” என்று பதிலளித்தார்கள்.46 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3373
- Book Index
- 47
Grades
- -