ஹதீஸ்கள்
#3370
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
அப்துர் ரஹ்மான் பின் அபீ லைலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என்னை கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் சந்தித்து, ‘‘நபி (ஸல்) அவர் களிடமிருந்து நான் செவியுற்ற ஓர் அன்பளிப்பை உனக்கு நான் வழங்கட் டுமா?” என்று கேட்டார்கள். நான், ‘‘ஆம், அதை எனக்கு வழங்குங்கள்” என்று பதில் சொன்னேன். உடனே அவர்கள், ‘‘நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், யிதங்கள்மீதும் தங்கள் குடும்பத்தார்மீதும் ஸலவாத் சொல்வது எப்படி? (என்று எங்களுக்குக் கற்றுக்கொடுங்கள்.) ஏனெனில், தங்க ளுக்கு நாங்கள் சலாம் சொல்வது எப்படி என்பதை அல்லாஹ் எங்களுக்கு (அத்தஹிய்யாத்தில்) கற்றுக்கொடுத்திருக் கின்றான்” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹும்ம! ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம் இன்ன(க்)க ஹமீதும் மஜீத்; அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்(த்)த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீதும் மஜீத்” என்று சொல்லுங்கள் என்று பதிலளித்தார்கள். (பொருள்: ‘‘இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள்மீதும் இப்ராஹீம் அவர்களுடைய குடும்பத்தார்மீதும் நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்கள்மீதும் முஹம்மதின் குடும்பத்தார்மீதும் கருணை புரிந்திடுவாயாக! நீயே புகழுக்குரியவனும் கண்ணியம் மிக்கவனும் ஆவாய். இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள்மீதும் இப்ராஹீம் அவர்களுடைய குடும்பத்தார்மீதும் நீ உன் அருள் வளத்தைப் பொழிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்கள்மீதும் முஹம்மதின் குடும்பத்தார்மீதும் உன் அருள்வளத்தைப் பொழிந்திடுவாயாக! நீயே புகழுக்குரியவனும் கண்ணியம் மிக்கவனும் ஆவாய்.) இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3370
- Book Index
- 44
Grades
- -