ஹதீஸ்கள்
#3369
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! உங்கள்மீது நாங்கள் எப்படி ‘ஸலவாத்’ சொல்வது?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அஸ்வாஜிஹி வ துர்ரியத்திஹி கமா ஸல்லய்த்த அலா ஆலி இப்ராஹீம வ பாரிக் அலா முஹம்மதின் வ அஸ்வாஜிஹி வ துர்ரிய்யத்திஹி கமா பாரக்த்த அலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீதுன் மஜீத்” (பொருள்: இறைவா! இப்ராஹீம் அவர்களுடைய குடும்பத்தார்மீது நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல் அவர்கள்மீதும் அவர்களுடைய துணைவியர் மற்றும் அவர்களுடைய சந்ததிகள்மீதும் கருணை புரிவாயாக! இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தார்மீது நீ உன் அருள் வளத்தைப் பொழிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்கள்மீதும் அவர்களுடைய துணைவியர் மற்றும் அவர்களுடைய சந்ததிகள்மீதும் உன் அருள் வளத்தைப் பொழிவாயாக! நிச்சயம், நீயே புகழுக் குரியவனும் கண்ணியம் நிறைந்தவனும் ஆவாய்) என்று சொல்லுங்கள்” எனப் பதிலளித்தார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3369
- Book Index
- 43
Grades
- -