ஹதீஸ்கள்
#3368
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
நபி (ஸல்) அவர்களின் துணைவி யாராகிய ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘உன்னுடைய சமுதாயத்தார் (குறைஷியர்) கஅபாவை (புதுப்பித்துக்) கட்டியபொழுது இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளங்களைவிடச் சுருக்கி (சற்று உள்ளடக்கி) கட்டியிருப்பதை நீ பார்க்கவில்லையா?” என்று கேட்டார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளங்களின் மீது அதைத் தாங்கள் மீண்டும் கட்டக் கூடாதா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘உன் சமுதாயத்தார் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாக இல்லாதிருந்தால் (அவ்வாறே நான் செய்திருப்பேன்)” என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர் சாலிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (இதை அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கக் கேட்ட) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், ‘‘ஆயிஷா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து இதைக் கேட்டிருந்தால் அது சரியே! ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹிஜ்ர் (எனும்) வளைந்த பகுதியை அடுத்துள்ள (கஅபா வின்) இரு மூலைகளையும் தொட்டு முத்த மிடாததற்குக் காரணம் இறையில்லமான கஅபா, இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளத்தில் முழுமையாக அமைக்கப்படாமல் (கொஞ்சம் விட்டு அமைக்கப்பட்டு) இருப்பதே ஆகும் என்றே நான் கருதுகிறேன்” எனக் கூறினார்கள்.42 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3368
- Book Index
- 42
Grades
- -