ஹதீஸ்கள்
#3361
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருநாள் (விருந்தின்போது) நபி (ஸல்) அவர்களிடம் இறைச்சி கொண்டுவரப் பட்டது. அப்போது அவர்கள், ‘‘அல்லாஹ் மறுமை நாளில் முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் ஒன்றுதிரட்டுவான். அழைப்பவனின் குரலை அவர்கள் கேட்பார்கள்; அனை வரின் பார்வைக்கும் அவர்கள் தென்படு வார்கள்; சூரியன் அவர்களுக்கு அருகில் வரும்” என்று கூறிவிட்டு ‘ஷஃபாஅத்’ எனும் பரிந்துரை தொடர்பான ஹதீஸைக் கூறினார்கள். பிறகு அவர்கள் (மக்கள்) இப்ராஹீம் (அலை) அவர்களிடம் வருவார்கள். ‘‘நீங்கள் அல்லாஹ்வின் தூதரும் பூமியில் அவனது நண்பருமாவீர்கள். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரையுங்கள்” என்று கூறுவார்கள். அவர்கள், தாம் சொன்ன பொய்களை நினைவுகூர்ந்து, (இன்று) என்னைப் பற்றியே நான் கவலைப்படுகிறேன். நீங்கள் மூசா (அலை) அவர்களிடம் செல்லுங்கள்” என்று பதிலளிப்பார்கள்.36 நபி (ஸல்) அவர்களிடமிருந்து இதே போன்று அனஸ் (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا اسحاق بن ابراهيم بن نصر، حدثنا ابو اسامة، عن ابي حيان، عن ابي زرعة، عن ابي هريرة رضى الله عنه قال اتي النبي صلى الله عليه وسلم يوما بلحم فقال " ان الله يجمع يوم القيامة الاولين والاخرين في صعيد واحد، فيسمعهم الداعي، وينفدهم البصر، وتدنو الشمس منهم فذكر حديث الشفاعة فياتون ابراهيم فيقولون انت نبي الله وخليله من الارض، اشفع لنا الى ربك. فيقول فذكر كذباته نفسي نفسي اذهبوا الى موسى ". تابعه انس عن النبي صلى الله عليه وسلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3361
- Book Index
- 36
Grades
- -
