ஹதீஸ்கள்
#3360
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘எவர் இறைநம்பிக்கை கொண்டு, பிறகு தம் இறைநம்பிக்கையில் அநீதியைக் கலக்காது இருக்கிறார்களோ அவர்களுக்கே நிம்மதி உண்டு. அவர்களே நல்வழி பெற்றவர்களாவர்” (6:82) எனும் இறை வசனம் அருளப்பட்டபோது, நாங்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எங்களில் தமக்கு அநீதியிழைத்துக்கொள்ளாதவர் எவர்தான் இருக்கிறார்?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், ‘‘(அதன் பொருள்) நீங்கள் சொல்வது போல் அல்ல. யிதங்கள் இறை நம்பிக்கையில் இணைவைப்பு எனும் அநீதியைக் கலந்துவிடாதவர்கள் என்றுதான் அதற்குப் பொருள். (அறிஞர்) லுக்மான் அவர்கள் தம் மகனுக்கு, யிஎன் அன்பு மகனே! அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே. இணைவைப்பு என்பது மாபெரும் அநீதியாகும்’ என்று சொன்ன(தாக குர்ஆனில் 31:13ஆவது வசனத்தில் அல்லாஹ் கூறுவ)தை நீங்கள் கேட்கவில்லையா?” என்று பதிலளித்தார்கள்.35 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3360
- Book Index
- 35
Grades
- -