ஹதீஸ்கள்
#3355
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இருக்கும்போது மக்கள், ‘‘தஜ்ஜாலின் இரு கண்களுக்கிடையே யிகாஃபிர்’ (நிராகரிப்ப வன்) என்றோ யிகாஃப், ஃபா, ரா’ என்றோ எழுதப்பட்டிருக்கும். (என்பது உண் மையா?)” என்று பேசிக்கொண்டார்கள். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் இப்படிச் செவியுறவில்லை. ஆனால், நபி (ஸல்) அவர்கள், ‘‘இப்ராஹீம் (அலை) அவர்கள் (எத்தகைய தோற்றமுடையவர்களாக இருந்திருப்பார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்) என்றால் உங்கள் தோழரை (என்னை)ப் பாருங்கள். மூசா (அலை) அவர்களோ சுருள்முடி உடைய வர்களாகவும், மாநிறம் கொண்டவர்களாக வும் இருந்தார்கள். ஈச்ச மர நாரினாலான கடிவாளம் இடப்பட்ட சிவப்பு நிற ஒட்டகத்தின் மீது பயணம் செய்வார்கள். அவர்கள் (ஹஜ்ஜின்போது ‘அல்அஸ்ரக்’ எனும்) பள்ளத்தாக்கில் இறங்குவதை (இப்போதும்) நான் பார்ப்பதைப் போன்று உள்ளது” என்று கூறினார்கள்.28 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3355
- Book Index
- 30
Grades
- -