ஹதீஸ்கள்
#3352
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவில் உருவப்படங்களைப் பார்த்த போது அவற்றை அழிக்கும்படி உத்தர விட்டு. அவ்வாறே அவை அழிக்கப்பட்ட பின்புதான் அதனுள் நுழைந்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்களையும் இஸ்மாயீல் (அலை) அவர்களையும் அவர்கள் தம் கையில் குறிசொல்லும் அம்புகளைப் பிடித்தபடி இருக்கும் நிலையில் (உருவங்களாகப்) பார்த்தார்கள். அப்போது, ‘‘அல்லாஹ் தன் கருணையிலிருந்து அவர்களை (குறைஷியரை) அப்புறப்படுத்துவானாக! அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் இருவரும் ஒருபோதும் அம்புகளின் மூலம் குறி பார்த்ததில்லை” என்று கூறினார்கள்.26 அத்தியாயம் :
حدثنا ابراهيم بن موسى، اخبرنا هشام، عن معمر، عن ايوب، عن عكرمة، عن ابن عباس رضى الله عنهما ان النبي صلى الله عليه وسلم لما راى الصور في البيت لم يدخل، حتى امر بها فمحيت، وراى ابراهيم واسماعيل عليهما السلام بايديهما الازلام فقال " قاتلهم الله، والله ان استقسما بالازلام قط
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3352
- Book Index
- 27
Grades
- -
