ஹதீஸ்கள்
#3351
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவினுள் நுழைந்தார்கள். அங்கு இப்ராஹீம் (அலை) அவர்களின் உருவப் படத்தையும் மரியம் (அலை) அவர்களின் உருவப் படத்தையும் கண்டார்கள். அப்போது, இந்தக் குறைஷியரோ உருவம் உள்ள வீட்டில் (இறை கருணை யைக் கொணரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்பதைக் கேள்விப்பட்டி ருக்கிறார்களே! இது இப்ராஹீமின் உருவம். (இதில், அவர் தம் கையில் இருக்கும் அம்புகளால்) குறி சொல்பவராக நிற்கிறாரே அவருக்கென்ன? (அவருக்கும் குறி சொல்வதற்கும் என்ன சம்பந்தம்?)” என்று கூறினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3351
- Book Index
- 26
Grades
- -