ஹதீஸ்கள்
#3350
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் தந்தை) ஆஸர் அவர்களை மறுமை நாளில் சந்திப்பார்கள். ஆஸருடைய முகத்தில் (புகையின்) கருமையும் புழுதியும் படிந்திருக்கும். அப்போது அவரிடம் இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘நான் உங்களிடம், எனக்கு மாறுசெய்ய வேண்டாம் என்று கூறவில்லையா?” என்று கேட்பார்கள். அதற்கு அவர்களின் தந்தை, ‘‘இன்று உனக்கு நான் மாறு செய்ய மாட்டேன்” என்று கூறுவார். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘இறைவா! மக்களுக்கு உயிர் கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளில் என்னை இழிவுபடுத்தமாட்டாய் என்று எனக்கு நீ வாக்களித்திருந்தாய். (உன் கருணையிலிருந்து) வெகு தொலைவில் இருக்கும் என் தந்தையைவிட வேறெந்த இழிவு (எனக்கு) அதிகம் இழிவு தரக் கூடியது?” என்று கேட்பார்கள். அப்போது உயர்ந்தோன் அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களிடம், ‘‘நான் சொர்க்கத்தை இறைமறுப்பாளர்களுக்குத் தடை செய்துவிட்டேன் (ஹராமாக்கிவிட்டேன்)” என்று பதிலளிப்பான். பிறகு ‘‘இப்ராஹீமே! உம்முடைய கால்களுக்குக் கீழே என்ன இருக்கிறதென்று பார்ப்பீராக!” என்று கூறப்படும். அவர்கள் கீழே பார்ப்பார்கள். அப்போது, அங்கே இரத்தத்தில் தோய்ந்த முடிகள் நிறைந்த கழுதைப்புலி ஒன்று கிடக்கும். பின்னர் அதன் கால்களைப் பிடித்துத் தூக்கப்பட்டு நரகத்தில் அது போடப்படும்.25 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3350
- Book Index
- 25
Grades
- -