ஹதீஸ்கள்
#3349
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் (மறுமை நாளில் காலில்) செருப்பணியாதவர்களாகவும் நிர்வாண மானவர்களாகவும், ஆண் குறிகளின் நுனித் தோல் நீக்கப்படாதவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள். பிறகு, ‘‘நாம் முதன் முதலாகப் படைத்ததைப் போன்றே அதை மீண்டும் படைப்போம். இது நம்மீது (பொறுப்பாகிவிட்ட நமது) வாக்குறுதியாகும். இதை நாம் நிச்சயம் செய்யவிருக்கின் றோம்” (21:104) என்னும் இறைவசனத்தை ஓதினார்கள். மறுமை நாளில் (நபிமார்களில்) முதன் முதலாக (சொர்க்கத்தின்) ஆடை அணிவிக் கப்படுபவர்கள் இப்ராஹீம் அவர்கள் ஆவார். என் தோழர்களில் சிலர் இடப் பக்கம் (நரகத்தை நோக்கி) கொண்டு செல்லப்படுவார்கள். நான், ‘‘இவர்கள் என் தோழர்கள். இவர்கள் என் தோழர்கள்” என்று (அவர் களை விட்டுவிடும்படி) கூறுவேன். அப்போது, ‘‘தாங்கள் இவர்களைப் பிரிந்(து மரணித்)ததிலிருந்து இவர்கள் தம் மார்க்கத்தைவிட்டு விலகி, தாம் வந்த சுவடுகளின் வழியே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள்” என்று கூறப்படும். அப்போது, (அல்லாஹ்வின்) நல்லடியார் (ஈசா (அலை) அவர்கள்) கூறியதைப் போல், ‘‘நான் அவர்களோடு இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்ப வனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக்கொண்டபோது நீயே அவர்களையும் கண்காணிப்பவனாக இருந்தாய். மேலும், நீ (இப்போது) அவர்களுக்குத் தண்டனை அளித்தால் அவர்கள் நிச்சயமாக உன் அடிமைகளே. நீ அவர்களை மன்னித்தாலும் (அப்போதும்) நீயே யாவற்றையும் மிகைத்தவனும் நுண்ணறிவுடையவனுமாய் இருக்கின்றாய்” (5:117லி118) எனும் இறைவசனங்களை (பதிலாக)க் கூறுவேன். இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن كثير، اخبرنا سفيان، حدثنا المغيرة بن النعمان، قال حدثني سعيد بن جبير، عن ابن عباس رضى الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال " انكم محشورون حفاة عراة غرلا ثم قرا – {كما بدانا اول خلق نعيده وعدا علينا انا كنا فاعلين} واول من يكسى يوم القيامة ابراهيم، وان اناسا من اصحابي يوخذ بهم ذات الشمال فاقول اصحابي اصحابي. فيقول، انهم لم يزالوا مرتدين على اعقابهم منذ فارقتهم. فاقول كما قال العبد الصالح {وكنت عليهم شهيدا ما دمت فيهم} الى قوله {الحكيم}
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3349
- Book Index
- 24
Grades
- -
