ஹதீஸ்கள்
#3305
ஸஹீஹ் அல்-புகாரீ - Beginning of Creation
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘இஸ்ரவேலர்களில் ஒரு குழுவினர் (மர்மமான முறையில்) காணாமல் போய் விட்டார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. நான் அவர்களை எலிகளாக (உருமாற்றப்பட்டுவிட்டதாக)வே கருதுகிறேன். அவற்றுக்கு (முன்னால்) ஒட்டகத்தின் பால் வைக்கப்பட்டால் அவை (அதைக்) குடிப்பதில்லை. அவற்றுக்கு (முன்பாக) ஆடுகளின் பால் வைக்கப்பட்டால் அவை (அதைக்) குடித்துவிடுகின்றனவே!” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.108 இதை நான் கஅபுல் அஹ்பார் (ரஹ்) அவர்களுக்கு அறிவித்தேன். உடனே அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் இதைச் சொல்ல நீங்கள் கேட்டீர்களா?” என்று வினவினார்கள். நான், ‘‘ஆம் (கேட்டேன்)” என்றேன். அவர்கள் (திரும்பத் திரும்பப்) பலமுறை அதேபோலக் கேட்டார்கள். ‘‘நான் தவ்ராத்தையா ஓதுகிறேன்? (அதிலிருந்து சொல்வதற்கு?)” என்று நான் கேட்டேன். அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا وهيب، عن خالد، عن محمد، عن ابي هريرة رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " فقدت امة من بني اسراييل لا يدرى ما فعلت، واني لا اراها الا الفار اذا وضع لها البان الابل لم تشرب، واذا وضع لها البان الشاء شربت ". فحدثت كعبا فقال انت سمعت النبي صلى الله عليه وسلم يقوله قلت نعم. قال لي مرارا. فقلت افاقرا التوراة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Beginning of Creation
- Hadith Index
- #3305
- Book Index
- 113
Grades
- -
