ஹதீஸ்கள்
#3304
ஸஹீஹ் அல்-புகாரீ - Beginning of Creation
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரவின் இருள் படரத் தொடங்கி விட்டால் லிஅல்லது நீங்கள் அந்திப் பொழுதை அடைந்தால்லி உங்கள் குழந்தை களை (வெளியே அனுப்பாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், அப்போது ஷைத்தான்கள் (வெளியே) பரவுகின்றன. இரவில் சிறிது நேரம் கழிந்துவிட்டால் அவர்களை (வெளியே செல்ல) விட்டு விடுங்கள். மேலும், (இரவு நேரத்தில்) கதவுகளைப் மூடிவிடுங்கள். அப்போது, அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள், ஏனெனில், ஷைத்தான் மூடப்பட்ட கதவைத் திறக்கமாட்டான். இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள்’ எனும் வாக்கியம் இடம்பெறவில்லை.107 அத்தியாயம் :
حدثنا اسحاق، اخبرنا روح، اخبرنا ابن جريج، قال اخبرني عطاء، سمع جابر بن عبد الله رضى الله عنهما قال رسول الله صلى الله عليه وسلم " اذا كان جنح الليل او امسيتم فكفوا صبيانكم، فان الشياطين تنتشر حينيذ، فاذا ذهب ساعة من الليل فحلوهم، واغلقوا الابواب، واذكروا اسم الله، فان الشيطان لا يفتح بابا مغلقا ".��� قال واخبرني عمرو بن دينار سمع جابر بن عبد الله نحو ما اخبرني عطاء ولم يذكر " واذكروا اسم الله
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Beginning of Creation
- Hadith Index
- #3304
- Book Index
- 112
Grades
- -
