ஹதீஸ்கள்
#3294
ஸஹீஹ் அல்-புகாரீ - Beginning of Creation
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவர்களுடைய துணைவியரான) குறைஷிப் பெண்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம் (ஜீவனாம்சத் தொகையை) அதிகமாக்கித் தரும்படி தம் குரல்களை உயர்த்தி கேட்டுக்கொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் அனுமதி கேட்டபோது அப்பெண்கள் அவசர அவசரமாகத் தங்கள் பர்தாக்களை அணிந்தபடி எழுந்துகொண்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தபடியே உமர் (ரலி) அவர்களுக்கு அனுமதி கொடுத்தார்கள். உமர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்களை ஆயுள் முழுவதும் அல்லாஹ் சிரித்தபடி (மகிழ்ச்சியாக) இருக்கச்செய்வானாக” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘என்னிடமிருந்த இந்தப் பெண்களைக் கண்டு நான் வியப்படைகிறேன். (என்னி டம் இயல்பாக அமர்ந்திருந்தவர்கள்) உங்கள் குரலைக் கேட்டவுடன் அவசர அவசரமாக பர்தா அணிந்துகொண்டார் களே” என்று சொன்னார்கள். உமர் (ரலி) அவர்கள், ‘‘அப்பெண்கள் அஞ்சுவதற்குத் தாங்களே அதிகத் தகுதி யுடையவர்கள் அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறிவிட்டு, (அப்பெண்களை நோக்கி) ‘‘தமக்குத்தாமே பகைவர்களாகி விட்ட பெண்களே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அஞ்சாமல் எனக்கா நீங்கள் அஞ்சுகிறீர்கள்?” என்று கேட்டார் கள். அதற்கு அந்தப் பெண்கள், ‘‘ஆம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒப்பிடும்போது நீங்கள் கடின சித்தமுடைய வராகவும் அதிகமாகக் கடுமை காட்டுப வராகவும் இருக்கிறீர்கள்” என்று பதிலளித் தார்கள். (அப்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! (உமரே!) நீங்கள் ஒரு பாதையில் சென்றுகொண்டி ருக்கையில் உங்களை ஷைத்தான் கண்டால் உங்களுடைய பாதையல்லாத வேறொரு பாதையில்தான் அவன் செல்வான்” என்று கூறினார்கள்.97 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Beginning of Creation
- Hadith Index
- #3294
- Book Index
- 103
Grades
- -