ஹதீஸ்கள்
#3290
ஸஹீஹ் அல்-புகாரீ - Beginning of Creation
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுத் போர் நடந்தபோது இணைவைப்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். உடனே இப்லீஸ், ‘‘அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால் பாருங்கள்” என்று கத்தினான். முஸ்லிம் களில் முன்னணிப் படையினர் திரும்பிச் சென்று தம் பின்னணிப் படையினருடன் போரிட்டார்கள்.93 அப்போது அங்கு (தமக்கருகேயிருந்த) தம் தந்தை யமான் (ரலி) அவர்கள் (முன்னணிப் படையினரிடம்) சிக்கிக் கொண்டதை ஹுதைஃபா (ரலி) அவர்கள் பார்த்துவிட்டு, ‘‘அல்லாஹ்வின் அடியார் களே! இவர் என் தந்தை! இவர் என் தந்தை!” என்று (உரக்கக்) கூறினார்கள். ஆனால், அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் அவரை விட்டுவைக்கவில்லை. இறுதியில் அவரை (தாக்கி)க் கொன்று விட்டார்கள். ஹுதைஃபா (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!” என்று கூறினார்கள்.94 ‘‘ஹுதைஃபா (ரலி) அவர்கள் மன்னித்ததால் (அவர்களின் வாழ்க்கையில்) அவர்கள் இறக்கும்வரை நல்ல பலன் இருந்துகொண்டேயிருந்தது” என்று உர்வா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.95 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Beginning of Creation
- Hadith Index
- #3290
- Book Index
- 99
Grades
- -