ஹதீஸ்கள்
#3261
ஸஹீஹ் அல்-புகாரீ - Beginning of Creation
அபூஜம்ரா அள்ளுபயீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் (மார்க்க அறிவு பெறுவதற்காக) மக்காவில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் அமர்வது வழக்கம். (ஒருமுறை) எனக்குக் காய்ச்சல் கண்டது. அப்போது, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன்னார்கள்: ‘ஸம்ஸம்’ தண்ணீரைப் பயன்படுத்தி உன் காய்ச்சலைத் தணித்துக்கொள். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இந்தக் காய்ச்சல் நரகத்தின் பெருமூச்சால்தான் உண்டாகிறது. ஆகவே, அதைத் தண்ணீரைக் கொண்டு தணித்துக்கொள்ளுங்கள் லி(அறிவிப்பாளர் ஹம்மாம் (ரஹ்) அவர்கள் சந்தேகத்துடன் கூறு கிறார்கள்:)லி அல்லது ஸம்ஸம் தண் ணீரைக் கொண்டு தணித்துக்கொள் ளுங்கள்” என்று கூறினார்கள்.66 அத்தியாயம் :
حدثني عبد الله بن محمد، حدثنا ابو عامر، حدثنا همام، عن ابي جمرة الضبعي، قال كنت اجالس ابن عباس بمكة، فاخذتني الحمى، فقال ابردها عنك بماء زمزم، فان رسول الله صلى الله عليه وسلم قال " الحمى من فيح جهنم فابردوها بالماء ". او قال " بماء زمزم ". شك همام
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Beginning of Creation
- Hadith Index
- #3261
- Book Index
- 71
Grades
- -
