ஹதீஸ்கள்
#3245
ஸஹீஹ் அல்-புகாரீ - Beginning of Creation
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் முதலாவதாக நுழைகின்ற அணியினரின் தோற்றம் பௌர்ணமி இரவில் ஒளிரும் (முழு) நிலவின் தோற்றத்தைப்போல் (பிரகாசமாக) இருக்கும். சொர்க்கத்தில் அவர்கள் சளி துப்பவும்மாட்டார்கள்; மூக்குச் சிந்தவும் மாட்டார்கள்; மல(ஜல)ம் கழிக்கவும் மாட்டார்கள். அங்கு அவர்களின் பாத்திரங் கள் தங்கத்தாலானவையாக இருக்கும். அவர்களின் (தலைவாரும்) சீப்புகள் தங்கத்தாலும் வெள்ளியாலும் ஆனவை யாய் இருக்கும். (அவர்கள் நறுமணப் புகையிடும்) அவர்களின் தூப கலசங்கள் அகில் கட்டைகளால் எரிக்கப்படும். (அங்கே) அவர்களின் வியர்வையில் கஸ்தூரி மணம் கமழும். அவர்களில் ஒவ்வொருவருக்கும் துணைவியர் இருவர் இருப்பர். அவ்விருவருடைய கால்களின் எலும்பு மஜ்ஜைகூட (காலின் அபரிமிதமான) அழகின் காரணத்தால் வெளியே தெரியும். (சொர்க்கவாசிகளின் முதல் அணியினரான) அவர்களுக்கிடையே மனவேறுபாடோ, பரஸ்பர வெறுப்புணர்வோ இருக்காது. அவர்களின் உள்ளங்கள் அனைத்தும் ஒன்றாகவே இருக்கும். அவர்கள் அல்லாஹ்வைக் காலையும் மாலையும் துதித்துக்கொண்டிருப்பர். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Beginning of Creation
- Hadith Index
- #3245
- Book Index
- 56
Grades
- -