ஹதீஸ்கள்
#3244
ஸஹீஹ் அல்-புகாரீ - Beginning of Creation
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் (கற்பனையிலும்) உதித்திராத இன்பங்களை என் நல்லடியார்களுக்காக நான் (சொர்க்கத்தில்) தயார்படுத்தி வைத்துள்ளேன்” என்று அல்லாஹ் கூறு கிறான். நீங்கள் விரும்பினால், யிமனிதர்கள் எவரும் தமக்காக மறைத்து வைக்கப்பட்டி ருக்கும் கண்குளிர்ச்சி (தரும் சொர்க்கத்து இன்பங்)களை அறியமாட்டார்கள்’ (32:17) எனும் இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا الحميدي، حدثنا سفيان، حدثنا ابو الزناد، عن الاعرج، عن ابي هريرة رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم " قال الله اعددت لعبادي الصالحين ما لا عين رات، ولا اذن سمعت، ولا خطر على قلب بشر، فاقرءوا ان شيتم {فلا تعلم نفس ما اخفي لهم من قرة اعين}
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Beginning of Creation
- Hadith Index
- #3244
- Book Index
- 55
Grades
- -
