ஹதீஸ்கள்
#3242
ஸஹீஹ் அல்-புகாரீ - Beginning of Creation
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தபோது அவர்கள், ‘‘நான் உறங்கிக்கொண்டிருந்தேன். அப்போது (கனவில்) என்னை சொர்க்கத் தில் கண்டேன். அப்போது (அங்கிருந்த) அரண்மனை ஒன்றின் ஓரத்தில் ஒரு பெண் அங்கத் தூய்மை (உளூ) செய்து கொண்டிருந்தாள். நான், ‘‘இந்த அரண் மனை யாருடையது?” என்று (வானவர் களிடம்) கேட்டேன். ‘‘உமர் பின் அல் கத்தாப் அவர்களுடையது” என்று பதிலளித்தார்கள். அப்போது எனக்கு உமரின் தன்மான உணர்வு நினைவுக்கு வந்தது. உடனே அங்கிருந்து திரும்பிச் சென்றுவிட்டேன்” என்று கூறினார்கள்.52 இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் அழுதார்கள். பிறகு ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்களிடமா நான் தன்மான உணர்வைக் காட்டுவேன்?” என்று கேட்டார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Beginning of Creation
- Hadith Index
- #3242
- Book Index
- 53
Grades
- -