ஹதீஸ்கள்
#3239
ஸஹீஹ் அல்-புகாரீ - Beginning of Creation
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: நான் (மிஅராஜ் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவில்48 மூசா (அலை) அவர்களை ‘ஷனூஆ’ குலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று மாநிற முடைய உயரமான, சுருள்முடி கொண்ட மனிதராகக் கண்டேன். ஈசா (அலை) அவர்களை நடுத்தர உயரமும் சிவப்பும் வெண்மையும் கலந்த மிதமான சரும அமைப்பு கொண்டவர் களாகவும் (சுருள் சுருளாக இல்லாமல்) படிந்த, தொங்கலான தலைமுடியுடையவர் களாகவும் கண்டேன். நரகத்தின் காவலரான (வானவர்) மாலிக்கையும், (இறுதிக் காலத்தில் வரவிருக்கும் மகா பொய்யனான) தஜ்ஜாலையும் கண்டேன். இவையெல்லாம் அல்லாஹ் எனக்குக் காண்பித்த அவனுடைய சான்றுகளில் உள்ளவை. ‘‘நீர் அவரை (மூசாவை)ச் சந்தித்ததில் சந்தேகம் ஏதும் கொள்ள வேண்டாம்.” (32:23) இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. ‘‘தஜ்ஜால் உள்ளே நுழைந்து விடாமல் மதீனா நகரத்தை வானவர்கள் காவல் காப்பார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்களும் அபூபக்ரா (ரலி) அவர்களும் அறிவிக் கிறார்கள்.49 அத்தியாயம் :
حدثنا محمد بن بشار، حدثنا غندر، حدثنا شعبة، عن قتادة،. وقال لي خليفة حدثنا يزيد بن زريع، حدثنا سعيد، عن قتادة، عن ابي العالية، حدثنا ابن عم، نبيكم يعني ابن عباس رضى الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال " رايت ليلة اسري بي موسى رجلا ادم طوالا جعدا، كانه من رجال شنوءة، ورايت عيسى رجلا مربوعا مربوع الخلق الى الحمرة والبياض، سبط الراس، ورايت مالكا خازن النار ". والدجال في ايات اراهن الله اياه، فلا تكن في مرية من لقايه. قال انس وابو بكرة عن النبي صلى الله عليه وسلم " تحرس الملايكة المدينة من الدجال
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Beginning of Creation
- Hadith Index
- #3239
- Book Index
- 50
Grades
- -
